என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
சூதாடிய 3 பேர் கைது ரூ.2.50 லட்சம் பணம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குட்டியப்பன் மற்றும் போலீசார் நாயக்கனூர் சர்ச் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடுவதை போலீசார் பார்த்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
இதில் சிவக்குமார் (வயது 50), கிருஷ்ணமூர்த்தி, அரியப்பன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 650&ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தலைமறைவான போஸ் என்கிற இளம்பிரியன், பிரபாகரன் என்கிற வெங்கடேஷ் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






