என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுவாமிக்கு சிறப்பு வழிபாடு.
வைத்தியநாத சுவாமி கோவிலில் தை கிருத்திகை வழிபாடு
வைத்தீஸ்வரன்கோவிலில் தை கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோவிலில் தை கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவிலில் தை கிருத்திகையையொட்டி, வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக, கிருத்திகை மண்டபம் எழுந்தருளிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.
Next Story






