என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

    கிருஷ்ணகிரி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி காந்தி நகர்  பசீர் முகமது லே அவுட் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் என்ஜீனியர்ங் படித்து விட்டு வேலை கிடைக்காமல் இருந்து வந்தார்.

    இதனால் மனமுடைந்து விரக்தி அடைந்த நிலையில் விக்னேஷ் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இதையொட்டி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×