என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிகிச்சை பெற்று வரும் காயத்ரி
    X
    சிகிச்சை பெற்று வரும் காயத்ரி

    கோவில் விழாவில் இரு சமூகத்தினரிடையே மோதல்

    குத்தாலம் அருகே கோவில் விழாவில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இளம்பெண் உள்பட 3 பேரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பருத்திக்குடி கிராமத்தில் மங்கள பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    இதையொட்டி, அம்பாள் புறப்பாடாகி வீதியுலா நடைபெற்றது. அப்போது, வழக்கத்தில் இல்லாத புதிய பாதையில் அம்பாள் வீதியுலா ஊர்வலம் சென்றதாகவும், இதற்கு மாற்று சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, அங்கிருந்து சென்ற விழாக் கமிட்டியைச் சேர்ந்த 7 பேர் அம்பாளை கோவிலில் இறக்கி வைத்துவிட்டு, பிள்ளையார் கோயில் தெருவுக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்த மக்களை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில், அப்பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகள் காயத்ரி (23) என்பவர் படுகாயம் அடைந்தார். 

    மேலும், முத்து (75), சுமதி (40) உள்ளிட்ட சிலரும் காயம் அடைந்தனர். அவர்கள் தற்போது, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாலையூர் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட வடக்குத்தெருவைச் சேர்ந்த கபாலி என்கிற செல்லமுத்து (27), சத்யராஜ் (28), மணிகண்டன் (27) ஆகிய 3 பேரை கைது செய்து, தப்பியோடி மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×