என் மலர்
உள்ளூர் செய்திகள்

மர்ம விலங்கு கடித்ததில் பலியான ஆடுகள்.
திருவண்ணாமலையில் மர்ம விலங்கு கடித்து 12 ஆடுகள் பலி
திருவண்ணாமலை அருகே மர்ம விலங்கு கடித்து 12 ஆடுகள் பலியானது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காஞ்சி ரோட்டில் வனப்பகுதியை ஒட்டி ஆடையூர் கிராமம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த விஜி என்பவர் மனைவி தெய்வானை 25 ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இவர் தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு இரவில் பட்டியில் அடைத்து செல்வார். நேற்றும் அதேபோல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை பட்டிக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த 25 ஆடுகளை மர்ம விலங்கு இருப்பது தெரியவந்தது. இதில் 12 ஆடுகள் இறந்து கிடந்தன.மேலும் 13 ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தன. அவைகளை வனப்பகுதியில் இருந்து வந்த மர்ம விலங்கு கடித்து கொன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் அந்த பகுதியில் வசித்து வரும் தெருநாய்கள் ஆடுகளை கடித்து கொன்றதா? என்பதும் தெரியவில்லை.ஆடுகளின் குடலைக் கிழித்து மர்ம விலங்கு சாப்பிட்டு உள்ளது. இதுபற்றி தெரியவந்ததும் ஆடையூர் கிராம மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






