search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணிக்கன் குப்பம் நரிக்குறவர் குடியிருப்பில் தாசில்தார் ஆய்வு
    X
    பணிக்கன் குப்பம் நரிக்குறவர் குடியிருப்பில் தாசில்தார் ஆய்வு

    பண்ருட்டி நரிக்குறவர் குடியிருப்பில் தாசில்தார் நேரில் ஆய்வு

    பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன் பணிக்கன் குப்பம் நரிக்குறவர் குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் பணிக்கன் குப்பம் ஊராட்சியில் நரிக்குறவர்கள் குடியிருப்பு உள்ளது. இங்குசுமார் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டது. இந்த வீடுகள் முற்றிலும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது

    இதுகுறித்து சபா. ராஜேந்திரன் எம்எல்ஏ, யூனியன் சேர்மேன் சபா. பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் மீனா பிலோமினா ஆரோக்கியதாஸ் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன் பணிக்கன் குப்பம் நரிக்குறவர் குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள அனைவருக்கும் மாற்று இடத்தில் வீட்டு மனை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார்.

    Next Story
    ×