என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி சாவு

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்துள்ள கெண்டிக்கானூர் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது55). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளது.

    இந்த நிலையில் கணவன்&மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும்  தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிவலிங்கம் மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார். 

    இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

    அங்கு சிகிச்சை பலனின்றி சிவலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×