என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
அ.தி.மு.க. வேட்பாளர் திடீரென வாபஸ் வாங்கியதால் கட்சியினர் அதிர்ச்சி
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளர் திடீரென வாபஸ் வாங்கியதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கீழ்பென்னாத்தூர்:
நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 -வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலும் நடைபெறுகிறது.
கடந்த 28-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை 15 - வார்டுகளுக்கும் 80 பேர் கட்சி சார்பாகவும், சுயேட்சையாகாவும் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். 5-ந்தேதி நடந்த பரிசீலினை போது 80 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மனுக்கள் திரும்ப பெற கடைசிநாளான நேற்று (7-ந்தேதி) அதிமுக - 1, பாமக - 3, சுயேட்சை - 9, மாற்று வேட்பாளர்கள். 3. என 16 நபர்கள் மனுக்களை திரும்ப பெற்றனர்.
இறுதி கட்ட வேட்பாளர்களாக திமுக & 13, காங்கிரஸ் - 1, விடுதலை சிறுத்தைகள் கட்சி - 1, அதிமுக - 14, பா.ஜ.க - 5, பா.ம.க.-7, நாம் தமிழர் கட்சி - 15, சுயேட்சை - 8 - என 64 வேட்பாளர்களின் சின்னங்கள் ஒதுக்கீடு செய்து இறுதிகட்ட வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான ஜெயபிரகாஷ் வெளியிட்டார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், ஏழுமலை உடனிருந்தனர். 15 வார்டுகளிலும் மனுதாக்கல் செய்திருந்த அதிமுக வேட்பாளர்களில் 2-வது வார்டுக்கு மனுதாக்கல் செய்திருந்த குமாரி, வேட்புமனுவை திரும்ப பெற்றது அதிமுக நிர்வாகிகளையும், தொண்டர் களையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
6-வார்டு பகுதியில் காங்கிரஸ்- பா.ஜ.க நேரடியாக போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சியினர் 15-வார்டுகளிலும் போட்டியிடுகின்றனர்.
Next Story






