search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குஷ்பு
    X
    குஷ்பு

    சென்னையில் பா.ஜனதாவை ஆதரித்து குஷ்பு தேர்தல் பிரசாரம்

    சென்னையில் பல வார்டுகளில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்கும் வகையில் குஷ்புவை பிரசார களத்தில் இறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
    சென்னை:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் எதிர்பார்த்த எண்ணிக்கையில் சீட் கிடைக்காததால் இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து களம் காண்கிறது. மேலும் தனித்து போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபிக்கவும் பா.ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

    பா.ஜனதா கட்சி வேட்பாளர்கள் பலர் இந்த தேர்தலில் பல வார்டுகளில் தி.மு.க.- பா.ஜனதா இடையே மட்டுமே கடும் போட்டி நிலவுவதாக கூறி வருகிறார்கள். பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய தலைவர்களும் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    இந்தநிலையில் சென்னையில் பல வார்டுகளில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்கும் வகையில் குஷ்புவை பிரசார களத்தில் இறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு கணிசமான ஓட்டுகளை பெற்றார்.

    எனவே அந்த ஓட்டுகளை பா.ஜனதாவுக்கு இழுக்க குஷ்புவை களம் இறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. குஷ்பு தற்போது லண்டனில் உள்ளார். அடுத்த வாரம் அவர் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு அவர் பிரசாரம் செய்கிறார். வீடு வீடாக சென்று அவரை பிரசாரத்தில் ஈடுபடுத்த கட்சி திட்டமிட்டுள்ளது.

    Next Story
    ×