என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னையில் பா.ஜனதாவை ஆதரித்து குஷ்பு தேர்தல் பிரசாரம்
Byமாலை மலர்8 Feb 2022 4:36 AM GMT (Updated: 8 Feb 2022 4:36 AM GMT)
சென்னையில் பல வார்டுகளில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்கும் வகையில் குஷ்புவை பிரசார களத்தில் இறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் எதிர்பார்த்த எண்ணிக்கையில் சீட் கிடைக்காததால் இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து களம் காண்கிறது. மேலும் தனித்து போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபிக்கவும் பா.ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.
பா.ஜனதா கட்சி வேட்பாளர்கள் பலர் இந்த தேர்தலில் பல வார்டுகளில் தி.மு.க.- பா.ஜனதா இடையே மட்டுமே கடும் போட்டி நிலவுவதாக கூறி வருகிறார்கள். பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய தலைவர்களும் பிரசாரம் செய்ய உள்ளனர்.
இந்தநிலையில் சென்னையில் பல வார்டுகளில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்கும் வகையில் குஷ்புவை பிரசார களத்தில் இறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு கணிசமான ஓட்டுகளை பெற்றார்.
எனவே அந்த ஓட்டுகளை பா.ஜனதாவுக்கு இழுக்க குஷ்புவை களம் இறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. குஷ்பு தற்போது லண்டனில் உள்ளார். அடுத்த வாரம் அவர் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு அவர் பிரசாரம் செய்கிறார். வீடு வீடாக சென்று அவரை பிரசாரத்தில் ஈடுபடுத்த கட்சி திட்டமிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் எதிர்பார்த்த எண்ணிக்கையில் சீட் கிடைக்காததால் இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து களம் காண்கிறது. மேலும் தனித்து போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபிக்கவும் பா.ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.
பா.ஜனதா கட்சி வேட்பாளர்கள் பலர் இந்த தேர்தலில் பல வார்டுகளில் தி.மு.க.- பா.ஜனதா இடையே மட்டுமே கடும் போட்டி நிலவுவதாக கூறி வருகிறார்கள். பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய தலைவர்களும் பிரசாரம் செய்ய உள்ளனர்.
இந்தநிலையில் சென்னையில் பல வார்டுகளில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்கும் வகையில் குஷ்புவை பிரசார களத்தில் இறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு கணிசமான ஓட்டுகளை பெற்றார்.
எனவே அந்த ஓட்டுகளை பா.ஜனதாவுக்கு இழுக்க குஷ்புவை களம் இறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. குஷ்பு தற்போது லண்டனில் உள்ளார். அடுத்த வாரம் அவர் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு அவர் பிரசாரம் செய்கிறார். வீடு வீடாக சென்று அவரை பிரசாரத்தில் ஈடுபடுத்த கட்சி திட்டமிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X