என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் தனியார் பஸ் வராததை கண்டித்து போராட்டம்
பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் தனியார் பஸ் வராததை கண்டித்து போராட்டம்
பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பஸ் வராததை கண்டித்து போராட்டம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரங்கிப்பேட்டை:
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை நகரில் சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றார்கள். இங்கு அரசு மற்றும் தனியார் பஸ் அந்தந்த நேரத்திற்கு.பரங்கிப்பேட்டை பஸ் நிலையம். வந்து செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக தனியார் பஸ்கள் அனைத்தும் பரங்கிப்பேட்டை வராமல் செல்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்" "அரசு.மற்றும்.தனியார் பஸ்கள் பரங்கிப்பேட்டை நகருக்கு வந்து செல்ல அனுமதி பெற்றுள்ளார்கள்.
ஆனால் சில தனியார் பஸ்கள் பரங்கிப்பேட்டை வராமல் சிதம்பரத்தில் இருந்து நேராக கடலூர். கடலூரில் இருந்து நேராக சிதம்பரத்திற்கும். செல்கின்றார்கள். இதனால் பஸ்சை நம்பியிருக்கும் பயணிகள் ஏமாற்றம் அடைந்து பஸ் நிலையத்தில் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது.
நேற்று மதியம் 11. மணியளவில் கடலூரிலிருந்து பரங்கிப்பேட்டை வழியாக தனியார் பஸ் ஒன்று சிதம்பரம் செல்ல பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் நின்றது. அப்போது பரங்கிப்பேட்டை பஸ் நிலைய சமூக ஆர்வலர்கள் அந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.
பரங்கிப்பேட்டை நகருக்கு அனுமதி பெற்றுக் கொண்டு ஆனால் பரங்கிப்பேட்டை நீங்கள் வருவதில்லை. இதனால் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. என்று பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து அந்த தனியார் பஸ்சை பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் சிறை பிடித்தனர்.சம்பவம்கேள்விப்பட்டதும். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ். மற்றும் போலீசார் பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்திற்கு வந்தனர்.
பின்னர் சிறைபிடித்த பொதுமக்களிடம் நீங்கள் பஸ்சை மறிக்க வேண்டாம் நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உங்கள் முடிவை சொல்லுங்கள் அதற்கான விடிவு காலம் பிறக்கும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் பஸ் டிரைவரிடமும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ்.சரியான நேரத்திற்கு பரங்கிப்பேட்டையில் வந்து செல்ல வேண்டும் என்று எச்சரித்தார் .மேலும் அந்த சமூக ஆர்வலர்கள் அந்த தனியார் பஸ்சில் 'வழி பரங்கிப்பேட்டை என்று பஸ் முன் பக்கம் கண்ணாடி பின்பக்கம் கண்ணாடியில் ஒட்டினர்கள்.
இதனால் பஸ் பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலைந்து சென்றனர் பின்னர் பஸ் எடுத்துச்செல்லப்பட்டது.இதனால் ஒரு மணி நேரம் அந்த பஸ் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
Next Story






