என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு முதியவர் பலி
கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்றுக்கு முதியவர் பலியானார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனா பாதிப் புடன் கடந்த மாதம் 26ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் கடந்த 4&ந் தேதி இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 96 பேர் பாதிக்கப்பட்டனர். 778 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதுவரை மாவட்டத்தில் 58 ஆயிரத்து 993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 55 ஆயிரத்து 288 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். தற்போது 3 ஆயிரத்து 335 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக உள்ளது.
Next Story






