என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது செய்யப்பட்ட வாலிபர்.
    X
    கைது செய்யப்பட்ட வாலிபர்.

    காரைக்காலில் இருந்து மதுபானம் கடத்தி வந்த வாலிபர் கைது

    சீர்காழி அருகே காரைக்காலில் இருந்து மதுபானம் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    சீர்காழி:

    சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்துக்கு உட்பட்ட சங்கரன்பந்தல் பகுதியில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந் தனர். அப்போது அவ் வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
     
    சோதனையில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த மூட்டையில் காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட 450 மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர் செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனம் மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
    Next Story
    ×