என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கணவர் வேலைக்கு செல்லாததால் இளம்பெண் தீக்குளிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியில் கணவர் வேலைக்கு செல்லாததால் இளம்பெண் தீக்குளித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பூவான். இவரது மனைவி தீபா (வயது34). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பூவான் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்&மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட தீபா நேற்று மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
உடனே தீக்காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீபாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






