என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மல்லூரில் மொபட் மீது கார் மோதி பெண் பலி
Byமாலை மலர்7 Feb 2022 6:24 AM GMT (Updated: 7 Feb 2022 6:24 AM GMT)
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் பெண் பலியானார்.
பனமரத்துப்பட்டி:
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள டி.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி கவிதா (வயது 38). இவர் மல்லூர் அருகே பிச்சம்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு, தனது மகள் விவேகா (18), உறவினர் நந்தகுமார் (28) ஆகியோருடன் நேற்று காலை மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மொபட்டை கவிதா ஓட்டினார். மல்லூரில் நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையை அவர் கடக்க முயன்றார்.
அப்போது நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மொபட் மீது மோதியது. இதனால் அவர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கவிதா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மகள் கண் முன்னே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து விவேகா கதறி அழுதார். அந்த வழியாக சென்றவர்கள் லேசான காயம் அடைந்த விவேகா, நந்தகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மல்லூர் போலீசார், கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X