என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

    மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
    கரூர்:

    தமிழகத்தில் வருகிற 19&ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமை தாங்கிதொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க கரூர்&கோவை சாலையில் தொடங்கிய அணிவகுப்பு கரூர் பஸ் நிலைய ரவுண்டானா, மேற்கு பிரதட்சணம் சாலை, திண்ணப்பாகார்னர், சர்ச்கார்னர்,  தலைமை தபால் நிலையம், ஜவகர் பஜார் வழியாக வந்து கரூர் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர் தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த காவல்துறை கொடி அணி வகுப்பில்,

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், கீதாஞ்சலி, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், டிஎஸ்பிக்கள் அய்யர்சாமி, முத்தமிழ்செல்வன், இன்ஸ் பெக்டர்கள் செந்தூர்பாண்டி, கார்த்திகேயன், பொன்ராஜ், உதவி ஆய்வாளர்கள் உள் ளிட்ட 300&க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×