என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சிங்காரப்பேட்டை அருகே வாலிபரை தாக்கி வீட்டை சூறையாடிய 5 பேர் கைது

    சிங்காரப்பேட்டை அருகே வாலிபரை தாக்கி வீட்டை சூறையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை சையத் நகரை சேர்ந்தவர் இர்பான் (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். கடந்த 3&ந்தேதி இர்பான் மோட்டார் சைக்கிளில் ரெட்டியூர் கிராமம் பக்கமாக சென்றார். அந்த நேரம் அவருக்கும் 17 வயது சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் 17 வயது சிறுவனுக்கு ஆதரவாக சிலர் இர்பான் வீட்டிற்கு ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் இர்பானை தாக்கினார்கள். மேலும் வீட்டின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தினார்கள்.

    இதில் காயம் அடைந்த இர்பான் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக இர்பான் கொடுத்த புகாரின் பேரில், சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, 17 வயது சிறுவன், பெரிய தள்ளப்பாடி பிரபாகரன் (22), சிவக்குமார் (22), ரெட்டியூர் ரமேஷ் (24), தீனா (24) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். 

    கைதானவர்கள் மீது கூட்டமாக வருதல், தாக்குதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×