என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டாசு
பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரிக்கை
பட்டாசு தொழிலை பாதுகாக்க பிரதமர் தலையிட வேண்டும் என்று சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
விருதுநகர்
குட்டிஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பல்வேறு ரகங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளால் பட்டாசு தொழில் சிவகாசியில் நலிவடைந்துள்ளது.
இங்கு தயாரிக்கும் பட்டாசுகளில் 35 சதவீதம் சரவெடிகள் தான். ஆனால் பொட்டாசியம் நைட்ரேட் கொண்டு பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது என விதி வகுக்கப்பட்டதால் தொழில் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், வருவாய்த்துறை மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களாக சிவகாசியில் 20 சதவீத பட்டாசு உற்பத்தியே நடக்கிறது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாதநிலை உள்ளது. எனவே இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
Next Story






