search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

    அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் தொழிலாளர் நலத் துறையின் சார்பில் தேசிய அமைப்பு சாரா  தொழிலாளர் அடையாள அட்டை பெறுவதற்கான முகாம் நடந்தது.

    முகாமிற்கு ஊராட்சித்தலைவர் செல்வி முருகேசன் தலைமை   தாங்கினார். தொழிலாளர் நலத்துறையின் அலுவலர்கள்   முன்னிலையில் பொதுமக்களிடம் ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் செல் நம்பர் ஆகியவைகள் பெற்று தொழிலாளர் நலத்துறையின் பிரபாகர் இதற்கான தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்தார்.

    இதில் கண்டியாநத்தம், கேசராபட்டி, புதுப்பட்டி மற் றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கு பெற்றனர்.
    Next Story
    ×