search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கடலூர் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    கடலூர் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் சுத்துகுளம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் முகிலன் (வயது 21)மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஐ.டி.ஐ. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    1 ஆண்டுக்கு முன்பு முகிலனுக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டு, அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மீண்டும் வயிற்றில் வலி ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று அதிக வலியுடன் தூங்கச் சென்ற முகிலன், காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்புறத்தில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கு போட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

    இதைப்பார்த்த அவர்களது பெற்றோர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×