என் மலர்
உள்ளூர் செய்திகள்

திமுக
காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் மாமனார்-மருமகள் ஒரே கட்சியில் போட்டி
காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் தி.மு.க.வில் மாமனாரும், மருமகளும் பக்கத்து பக்கத்து வார்டுகளில் போட்டியிடுவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பொது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வில் முன்னாள் பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, 5-வது வார்டு தமிழ்செல்வன், 10-வது வார்டு கிருஷ்ண மூர்த்தி, 18 வது வார்டு ராமலிங்கம் உள்ளிட்ட 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற 9 பேர் புதிய முகங்களாக தேர்வு செய்யப்பட்டு களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தி.மு.க. நகர செயலாளர் முன்னாள் தலைவர் கணேசமூர்த்தி மீண்டும் 17-வது வார்டில் போட்டியிடுகிறார். இவரது மருமகள் ஆனந்தி வசந்த் 15-வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க.,வில் மாமனாரும், மருமகளும் பக்கத்து பக்கத்து வார்டுகளில் போட்டியிடுவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பொது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வில் முன்னாள் பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, 5-வது வார்டு தமிழ்செல்வன், 10-வது வார்டு கிருஷ்ண மூர்த்தி, 18 வது வார்டு ராமலிங்கம் உள்ளிட்ட 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற 9 பேர் புதிய முகங்களாக தேர்வு செய்யப்பட்டு களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தி.மு.க. நகர செயலாளர் முன்னாள் தலைவர் கணேசமூர்த்தி மீண்டும் 17-வது வார்டில் போட்டியிடுகிறார். இவரது மருமகள் ஆனந்தி வசந்த் 15-வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க.,வில் மாமனாரும், மருமகளும் பக்கத்து பக்கத்து வார்டுகளில் போட்டியிடுவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






