என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
ஓசூரில் இறைச்சி வியாபாரி மாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே மாயமான இறைச்சி வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டபள்ளி அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ஜமீர் (வயது24). இவர் அந்த பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், கடந்த 27-ந்தேதி, வீட்டை வெளியே சென்ற அவர், இதுவரை வீடு திரும்பவில்லை.
இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் ஜரின ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






