என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,180 பேர் வேட்புமனு தாக்கல்

    உள்ளாட்சி தேர்தலில் 171 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 1180 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டுகளுக்கும், ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகளுக்கும், தேன்கனிக் கோட்டை பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கும், பர்கூர், காவேரிப்பட்டணம், கெல மங்கலம், நாகோஜனஹள்ளி, ஊத்தங்கரை ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளுக்கும் என மொத்தம் 171 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. மனுத்தாக்கலின் கடைசி நாளான நேற்று ஓசூர் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 206 வேட்புமனுத்தாக்கல் செய்தனர். 45 வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 378 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி நகராட்சியில் நேற்று 152 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். 33 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மொத்தம் 264 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். பர்கூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 78 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 95 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தேன்கனிக்கோட்டை பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 18 வார்டு உறுப்பினர் பதவிக்கு 104 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 95 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கெலமங்கலம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 78 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாகோஜனஅள்ளி பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 69 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 15 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 74 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    ஊத்தங்கரை பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 42 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 92 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 171 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,180 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.  வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் திரும்ப பெற வருகிற 7&ந் தேதி கடைசி நாளாகும்.

    Next Story
    ×