என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வயல்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
    X
    வயல்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

    இயற்கை முறையில் விவசாயம் செய்த வயல்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

    குத்தாலம் அருகே இயற்கை முறையில் விவசாயம் செய்த வயல்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள கந்தமங்கலம் கிராமத்தில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலமாக பாரம்பரிய நெல் ரகங்களை ஊக்குவிக்கும் வகையில் கருப்பு கவுணி, கிச்சலி சம்பா, சீரக சம்பா மற்றும் தூயமல்லி போன்ற பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்த வயல்களில் வேளாண் துறையினரின் ஆய்வு நடைபெற்றது.

    இதில் மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குல அகன்டராவ், சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ராகுல். வேளாண் உதவி இயக்குனர் வெற்றிவேலன்.

    வட்டார தொழில் நுட்ப மேலாளர் லெக்ஷ்மி நாராயணன், உதவி தொழில் நுட்ப மேலாளர் ஆரோக்கிய அலெக்சாண்டர், வேளாண் உதவி அலுவலர் கலையரசன், ஐசிஐசிஐ பவுண்டேஷன் வளர்ச்சி அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு இயற்கை பண்ணையம் குறித்து ஆய்வு செய்தனர். 

    நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் இயற்கை விவசாயம் செய்த விவசாயிகளை பாராட்டினார்.
    Next Story
    ×