என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருஇந்தளூர், பரிமள ரெங்கநாதர் கோவில்
பரிமள ரெங்கநாதர் கோவிலில் படிச்சட்டத்தை திருடிய 2 பேர் கைது
மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவிலில் படிச்சட்டத்தை திருடிய 2 பேர் கைது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் உற்சவ மூர்த்தியை தூக்கி செல்ல பயன்படும் படிச்சட்டம் தோளுக்குகினியாள் என்றழைக்கப்படும்.
கடந்த 2014-&ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த படிச்சட்டத்தில் கவசமாக போடப்பட்டிருந்த வெள்ளி தகடுகள் உரித்து எடுக்கப்பட்டு திருடு போனது.
இது குறித்து சென்னை கே.கே.நகரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சிலை தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். இந்த மனுவின் மீது பூர்வாங்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு மனுவில் கூறியதுபடி வெள்ளி தகடுகள் உரிக்கப் பட்டு களவு- போனது உண்மை எனத் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஸ்ரீநிவாச ரெங்க பட்டாச்சாரியார், முரளிதரன் பட்டாச்சாரியார் ஆகியோர் படிச்சட்டத்தில் வெள்ளி தகடுகளை உரித்து களவாடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பழைய படிச்சட்டத்தை போன்றே வெள்ளி தகடுகள் பதித்து புதியதாக படிச்சட்டம் செய்திட ஒரு கடையில் பழைய படிச்சட்டத்திலிருந்து உரித்து எடுத்து உருக்கி வெள்ளிகட்டிகளை கொடுத்தும், மேலும் நன்கொடையாளர்கள் மூலம் பணம் கொடுக்க செய்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் ஸ்ரீநிவாசரெங்க பட்டாச்சாரியார், முரளிதரன் பட்டாச்சாரியார் ஆகிய 2 பேரையும் கைது செய்து மயிலாடுதுறையில் உள்ள ஒரு ஜீவல்லரியில் புதிதாக செய்யப்பட்ட புதிய படிச்சட்ட வெள்ளி உருப்படிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






