என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பாக இன்று குவிந்த கட்சி தொண்டர்கள்.
    X
    வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பாக இன்று குவிந்த கட்சி தொண்டர்கள்.

    வேலூர் மாநகராட்சியில் கட்சி தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு

    வேலூர் மாநகராட்சியில் 46 வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் மனு தாக்கல் செய்யபட்ட நிலையில் கட்சி தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மனு தாக்கல் தொடங்கியது. 

    வேலூர் மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் மனுத் தாக்கல் செய்வதற்காக காட்பாடி மண்டல அலுவலகம் மாநகராட்சி அலுவலகம் புதிய மாநகராட்சியில் 3 இடங்கள் மற்றும் சத்துவாச்சாரி மண்டல அலுவலகம், 4-வது மண்டல அலுவலகம் என 6 இடங்களில் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கொரோனா தோற்று பரவல் காரணமாக அதிக மக்கள் கூடுவதை தடுக்கும் பொருட்டு 6 இடங்களில் மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    சனி ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை என்பதால் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் நேற்று மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க மற்றும் சுயேட்சைகள் என 36 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பாளர்கள் பட்டாசு வெடித்து தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர். 

    இதனால் மனுத்தாக்கல் நடைபெற்ற அலுவலகம் முன்பு ஏராளமான தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
    Next Story
    ×