என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
சாலை விபத்தில் வாலிபர் பலி
பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மருவத்தூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் விக்ணேஷ் வயது 23 . கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் அருமடல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது இருசக்கரவாகனத்தில் சென்றார். அங்கு அனைவரையும் சந்தித்துவிட்டு, இரவில் கவுள்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
சறுக்குபாலம் அருகே வந்த போது, நிலைதடுமாறி அருகே உள்ள ஓடையில் வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்த அப்பகுதியினர், மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், சப்இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்த விக்ணேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






