என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சிவகாசி அருகே லாட்டரி விற்ற 3 பேர் கைது

    சிவகாசி அருகே லாட்டரி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சிவகாசி பாவடி தோப்பு பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சிலர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் கேரள மாநில லாட்டரி சீட்டுக்களை ஆன்-லைன் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சாரதாநகரை சேர்ந்த வைரமுத்து (வயது41), நாரணாபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (25), சர்க்கரை வாவா தெருவை சேர்ந்த மணிகண்டன் (31) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து லாட்டரி விற்ற பணம் ரூ.7440-ஐ பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கார்த்திக் என்பவரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×