என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    எந்திரம் பழுதால் 2 நாட்களாக நெல் கொள்முதல் பணி பாதிப்பு

    திருக்கடையூர் கொள்முதல் நிலையத்தில் எந்திரம் பழுதால் 2 நாட்களாக நெல் கொள்முதல் பணி பாதிப்படைந்துள்ளது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய 165 அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. 

    கடந்த 27-ம்தேதி முதல் தினந்தோறும் 1000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் திருக்கடையூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் நேற்று நெல் தூற்றும் எந்திரம் பழுதடைந்தது. இதனால் கொள்முதல் நிறுத்தப்பட்டது.

    ஆன்லைனில் பதிவு செய்து டோக்கன் பெற்று காத்திருந்த விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யமுடியாமல் ஏமாற்றமடைந்தனர். 

    எந்திரம் பழுதுநீக்கம் செய்யப்பட்டு இன்று மீண்டும் கொள்முதல் செய்தபோது நேற்று டோக்கன் பெற்றவர்கள் நெல்லை கொள்முதல் செய்யாமல் மீண்டும் ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு வரச்சொல்வதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    நெல் தூற்றும் எந்திரம் மீண்டும் பழுது ஏற்பட்டதால் இன்றும் கொள்முதல் நிறுத்தப்படலாம். உடனடியாக எந்திரத்தை பழுது நீக்கம் செய்து முன்பதிவு செய்து டோக்கன் பெற்ற விவசாயிகளை அலைகழிக்காமல் கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிபகழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×