என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    தேர்தல் தொடர்பான புகார் அளிக்க தொலை பேசி எண் வெளியீடு

    தேர்தல் தொடர்பான புகார்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் வாயிலாக தெரிவிக்கலாம்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்  மாவட்ட  கலெக்டர்  ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான   பெரம்பலூர் நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளுக்கும்   வருகிற 19-ந்தேதி  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தல் தொடர்பாக  பொதுமக்கள்  புகார்கள்  மற்றும் குறைகள்  மாவட்ட நிர்வாகத்திற்கு  தெரிவிக்க  மாவட்ட அளவில்  மாவட்ட ஆட்சியரகத்தில்  தேர்தல் பிரிவில்  கட்டுப்பாட்டு அறை  கடந்த 28-ந்தேதி முதல்  செயல்பட்டுவருகிறது. பொதுமக்கள் தேர்தல் குறித்த புகார்களை 04328-225201 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

    தொலைபேசி எண்ணை பயன்படுத்தி பொதுமக்கள்  நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல் தொடர்பான  குறைகள் மற்றும்  புகார்களை  தெரிவிக்கலாம்.இந்தகட்டுப்பாட்டு அறை 28.1.22 முதல்  வருகிற 18-ந்தேதி வரை 24 மணிநேரமும்  செயல்படும்.

    பொதுமக்களிடம் இருந்து வரப்படும்  புகார்கள்  மற்றும் குறைகள்  உடனடியாக  தொடர்புடைய உள்ளாட்சி  அமைப்பின்  தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவித்து  நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×