search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குடியாத்தத்தில் கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

    குடியாத்தத்தில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் பறித்த வேலூர் ரவுடி கைது செய்யப்பட்டார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் இவர் குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் அருகே உள்ள முனாப்டிப்போ பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார். 

    அப்போது அவரை  வழிமறித்து வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றார்.  இதுகுறித்து சந்தோஷ்குமார் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

    அப்போது குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில்  சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம்  சோதனை செய்த போது  ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது.

    விசாரணையில் அவர் வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சசிகுமார் என்ற சசி (வயது 33) என தெரிய வந்தது. மேலும் அவரிடம் விசாரித்த போது சந்தோஷ்குமாரிடம் பணம் பறித்ததும் இவர்தான் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

    சசிகுமார் வேலூரில் பிரபல ரவுடியான குப்பன் கூட்டாளி என கூறப்படுகிறது. சசிகுமார் மீது வேலூர் வடக்கு, தெற்கு, தாலுகா, சத்துவாச்சாரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, வழிப்பறி, தகராறு என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. 

    பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகுமார் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வந்த மறுநாளே வழிபறியில் ஈடுபட்டுள்ளார்.

    இதுதொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×