என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தரங்கம்பாடி:
ஐக்கிய விவசாயிகள் முன்னணியுடன் செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்று, துரோகம் செய்யாதே என்ற முழக்கத்தோடு மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் துரோக நாள் ஆர்ப்பாட்டம் மாநில செயற்பாட்டுக்குழு உறுப்பினர் சாமி.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்டத்தலைவர் சிம்சன், இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் முருகன் ஆகியோர் முன்னணியில் சங்கம் வகிக்கும் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டு ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
Next Story






