என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
காரைக்காலில் நரிக்குறவர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
காரைக்காலில் நரிக்குறவர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால்:
காரைக்கால் அன்புநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது31). கூலி தொழிலாளி. நேற்று மாலை காரைக்கால் நகர் பகுதியில் வசிக்கும் 33 வயது நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டு வாசலில் நின்றார். அப்போது அவ்வழியே சென்ற மணிகண்டன், அப்பெண்ணின் சேலையை பிடித்து இழுத்து, வாயை பொத்தி வீட்டுக்குள் இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அப்போது, அப்பெண் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு நரிக்குறவர் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குபதிந்து மணிகண்டனை கைது செய்தார்.
காரைக்கால் அன்புநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது31). கூலி தொழிலாளி. நேற்று மாலை காரைக்கால் நகர் பகுதியில் வசிக்கும் 33 வயது நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டு வாசலில் நின்றார். அப்போது அவ்வழியே சென்ற மணிகண்டன், அப்பெண்ணின் சேலையை பிடித்து இழுத்து, வாயை பொத்தி வீட்டுக்குள் இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அப்போது, அப்பெண் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு நரிக்குறவர் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குபதிந்து மணிகண்டனை கைது செய்தார்.
Next Story






