என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
பாரூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள வெற்றிலை கானூர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் பரத் (வயது 25). இவர் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகின்றார். பின்னர் பரத் திருச்செங்கோடு பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்து மனமுடைந்த நிலையில் இருந்துள்ளதாக உறப்படுகிறது.
இந்நிலையில் வாலிபர் பரத் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து உறவினர்கள் பாரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் விரைந்து சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர் பரத்தின் உடலை கைபற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






