என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
கள்ளக்குறிச்சியில் தங்கும் விடுதிகளில் விபச்சாரம் - 5 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் 2 தங்கும் விடுதிகளில் விபச்சாரம் செய்த 2 பெண் புரோக்கர்கள் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த சம்பவம் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே டி.ஏந்தல் கிராமத்தை அடுத்து உள்ள கொரக்கை நத்தம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). இவர் ராமநத்தம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் சர்வீஸ் ரோட்டில் ஓட்டல் நடத்தி வந்தார்.
நேற்று இரவு மணிகண்டன் ஓட்டலுக்கு மேல் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இன்று காலை நீண்ட நேரம் அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்தது. உடனே ஓட்டலில் வேலை பார்க்கும் ஊழியர் ஜன்னல் வழியே எட்டிபார்த்தார். அப்போது மணிகண்டன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டன் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






