என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் இன்று 78 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் இன்று 78 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுவரை 56,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,922 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,162 பேர் பலியானார்கள். தற்போது 1,443 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






