என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி கடற்கரையில் 2-வது முறையாக இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத கடல் ஆமை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் நேற்று மாலை ராட்சத கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது.
இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி வனச்சரக அலுவலக வனச்சரகர் திலீபன் உத்தரவுபடி மருந்து வாழ்மலை வனக்காப்பாளர் பிரபாகரன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர் பிரவீன் உள்பட பலர் கன்னியாகுமரி கடற்கரைக்கு விரைந்து சென்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்த ராட்சத கடல் ஆமையை மீட்டனர்.
பின்னர் அந்த ஆமையை பிரேத பரிசோதனைக்காக வாரியூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமரி கடற் கரையில் இதுபோன்று ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ராட்சத கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இப்போது 2-வது முறையாக ராட்சத கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதற்கு முன்பு கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டால்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. அப்போது 30க்கும் மேற்பட்ட டால்பின் மீன்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரைக்கு படையெடுத்து வந்த வண்ணம் இருந்தன.
இதுபற்றி விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கூறும் போதும் இயற்கை மாற்றங்களின் காரணமாகவும் கடலில் ஏற்படும் சில சீதோசன நிலை காரணமாகவும் இது போன்று அடிக்கடி ராட்சத கடல் ஆமைகள் மற்றும் டால்பின் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் என்று கூறினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்