என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் கவி
புதுக்கோட்டை மாவட்டத்தில் 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் மற்றும் நடத்தை விதிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கவிதா ராமு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:
புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட, புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளிலும், 8 பேரூராட்சிகளிலும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் 2 நகராட்சிகளில் 69 வார்டுகளுக்கும், 8 பேரூராட்சிகளுக்குட்பட்ட 120 வார்டுகள் என மொத்தம் 189 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலை சுமூகமாகவும், எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையுமின்றி நடத்திடும் வகையில் 30 பறக்கும் படைகளும், 10 இடங்களில் சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டு சட்டவிரோதமான செயல்கள் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இத்தேர்தல் காலத்தில் ரூ.50,000 க்கும் மேற்பட்ட தொகைகள் எடுத்தும் செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்களுடன் செல்லவேண்டும். 2 நகராட்சிகளில் 25 வாக்குப்பதிவு மையங்களும், 8 பேரூராட்சிகளில் 20 வாக்குப்பதிவு மையங்கள் என 45 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, மேற்கண்ட இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்தல் நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தொடர்புடைய அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றும் வகையில் அனைத்து வகையான தேர்தல் நடவடிக்கைகளும் சி.சி.டி.வி. கேமரா மூலம் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை கே.கே.சி. கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றி தேர்தலை சுமுகமாக நடத்திட ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் மற்றும் நடத்தை விதிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கவிதா ராமு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:
புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட, புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளிலும், 8 பேரூராட்சிகளிலும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் 2 நகராட்சிகளில் 69 வார்டுகளுக்கும், 8 பேரூராட்சிகளுக்குட்பட்ட 120 வார்டுகள் என மொத்தம் 189 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலை சுமூகமாகவும், எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையுமின்றி நடத்திடும் வகையில் 30 பறக்கும் படைகளும், 10 இடங்களில் சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டு சட்டவிரோதமான செயல்கள் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இத்தேர்தல் காலத்தில் ரூ.50,000 க்கும் மேற்பட்ட தொகைகள் எடுத்தும் செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்களுடன் செல்லவேண்டும். 2 நகராட்சிகளில் 25 வாக்குப்பதிவு மையங்களும், 8 பேரூராட்சிகளில் 20 வாக்குப்பதிவு மையங்கள் என 45 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, மேற்கண்ட இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்தல் நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தொடர்புடைய அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றும் வகையில் அனைத்து வகையான தேர்தல் நடவடிக்கைகளும் சி.சி.டி.வி. கேமரா மூலம் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை கே.கே.சி. கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றி தேர்தலை சுமுகமாக நடத்திட ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story






