search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டா கணினி திருத்தம் முகாம்
    X
    பட்டா கணினி திருத்தம் முகாம்

    திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஒன்றியங்களில் பட்டா கணினி திருத்தம் முகாம்

    மகிபாலன்பட்டி ஊராட்சி, மற்றும் சிங்கம்புனரி வட்டத்திற்கு உட்பட்ட முறையூர் ஊராட்சி ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் நடத்தப்பட்ட முகாமில் பெறப்பட்ட முப்பத்தி ஐந்து மனுக்களில் 14 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பட்டா கணினி திருத்தம் முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் சுழற்சி முறையில்  வருவாய்த் துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் திருப்பத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட மகிபாலன்பட்டி ஊராட்சி, மற்றும் சிங்கம்புனரி வட்டத்திற்கு உட்பட்ட முறையூர் ஊராட்சி ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் நடத்தப்பட்ட முகாமில் பெறப்பட்ட முப்பத்தி ஐந்து மனுக்களில் 14 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் மீதமுள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடம் வருவாய்த் துறையினரால் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் தீர்வு என்காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வட்டாட்சியர் பஞ்சாபிகேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி,மண்டல துணை வட்டாட்சியர் சிவராமன், முறையூர் ஊராட்சி மன்ற தலைவர்  என்.எம்.சுரேஷ் மற்றும் வருவாய் அலுவலர்கள், கிராம அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.
    Next Story
    ×