என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    இலவச வீட்டு மனைபட்டா வழங்க கோரி வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைத்து தீக்குளிக்கும் போராட்ட அறிவிப்பு

    திட்டக்குடி அருகே இலவச வீட்டு மனைபட்டா வழங்க கோரி வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைத்து தீக்குளிக்கும் போராட்ட அறிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே வதிஷ்டபுரம் பகுதியில் உள்ள காலனி மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா இதுவரை வழங்கவில்லை என முன்னாள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன்பன் தலைமையில் திட்டக்குடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திக்கிடம் மனு அளித்தனர். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

    வதிஷ்டபுரம் காலனி பகுதியில் 400 -க்கும்மேற்பட்டோர் தங்குவதற்கு இடமில்லாமல் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பல வருடங்களாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவே வருகிற 15-ந் தேதி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைத்து தீக்குளிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார். நகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டம் அறிவித்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
    Next Story
    ×