என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் கைது

    வேலூர் அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள கத்தாழம்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 33).ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இந்துமதி (32) தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 

    சந்தோஷ் குமார் வரதட்சணை கேட்டு தகராறு செய்தார். இதனால் இந்துமதி கணவரை பிரிந்து விரிஞ்சிபுரம் அருகே உள்ள கம்மவார்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் சந்தோஷ்குமார் இந்துமதிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. இதனை அறிந்த இந்துமதி அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயாவிடம் புகார் மனு அளித்தார்.

    இதுகுறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மகளிர் போலீசாருக்கு டி.ஐ.ஜி. ஆனி விஜயா உத்தரவிட்டார்.

    அதன்பேரில் வேலூர் அனைத்து மகளிர் போலீசார் சந்தோஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வேலூர் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். 82201 66100 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

     மேலும் இந்த எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் மனுக்களை அனுப்பலாம்.அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×