search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதானவர்களை படத்தில் காணலாம்.
    X
    கைதானவர்களை படத்தில் காணலாம்.

    முயல் வேட்டையாடிய 3 பேர் கைது

    திருவண்ணாமலை அருகே முயல் வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருவண்ணாமலை:

    வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனக்குழுவினர் 3 பேர் திப்பக்காடு வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது  நள்ளிரவு 12மணி அளவில் திப்பக்காடு காப்புகாடு பகுதியில் 5மர்மநபர்கள் டார்ச் லைட் உள்ளிட்ட பொருட்களுடன் முயல்களை வேட்டையாடி கொண்டு இருந்தனர். .அவர்களை வனக்குழுவினர் விரட்டி சென்று 3பேரை பிடித்தனர். 

    2 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கத்தரிவாடியை சேர்ந்த மேஸ்திரி கருணாகரன்(வயது 28) மங்கலம் புதூரைசேர்ந்த திருமலை (வயது 29) டிரைவர், வள்ளிவாகை கோபி குப்பம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 44) டிரைவர் என்பது தெரியவந்தது.

    அவர்களை வனக்குழுவினர் கைது செய்து வேட்டையாட பயன்படுத்திய பொருட்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்களுடன் வேட்டையாட வந்து தப்பி சென்று 2பேரை  தேடி வருகின்றனர். 
    Next Story
    ×