என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆபரேஷன் செய்யப்பட்ட காளை.
எருதுவிடும் விழாவில் காயமடைந்த காளைக்கு தாடையில் ஆபரேஷன்
எருதுவிடும் விழாவில் காயமடைந்த காளைக்கு தாடையில் ஆபரேஷன் செய்து வேலூர் கால்நடை டாக்டர்கள் அசத்தினர்.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் பூசிமலைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் காளை ஒன்றை வளர்த்து வருகிறார்.
கடந்த 24&ந் தேதி வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை பகுதியில் நடைபெற்ற எருது விழாவில் பங்கேற்ற அந்த காளை கீழே விழுந்தது.இதில் அதன் கீழ் தாடை கிழிந்து எலும்பு முறிவு ஏற்பட்டது.
காளைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக அதன் உரிமையாளர் விஜயகுமார் அன்றைய தினமே வேலூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது காளையை பரிசோதித்த டாக்டர்கள் காளைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
கால்நடை டாக்டர் ஜோசப்ராஜ் தலைமையிலான டாகடர்கள் ரவிசங்கர், அரேஷ், சுப்பிரமணி ஆகியோர் கொண்ட குழுவினர் காளைக்கு மயக்க மருந்து அளித்து சுமார் 4 மணி நேர அறுவை சிகிச்சை செய்தனர். 30 தையல் போடப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த காளை நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு காளை நன்றாக உணவு எடுத்துக் கொள்வதாகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
Next Story






