என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாநகராட்சியில் வேட்பு மனுதாக்கல் தாடங்கியது. அங்கு பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்த போலீசார்.
    X
    வேலூர் மாநகராட்சியில் வேட்பு மனுதாக்கல் தாடங்கியது. அங்கு பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்த போலீசார்.

    வேலூர் மாநகராட்சியில் இன்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை

    வேலூர் மாநகராட்சியில் இன்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. தேர்தல் அலுவலகங்களில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாநகராட்சியில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 208 ஆண்களும், 2 லட்சத்து 15 ஆயிரத்து 1 பெண்களும், 46 திருநங்கைகளும் என மொத்தம் 4 லட்சத்து 14 ஆயிரத்து 255 வாக்காளர்கள் உள்ளனர். 437 வாக்குச்சாவடிகள் உள்ளது.

    மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    60 வார்டுகள் கொண்ட மாநகராட்சிக்கு 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 10 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தாராபடவேட்டில் உள்ள 1-வது மண்டல அலுவலகம், மாநகர சுகாதார நல அலுவலகம், சத்துவாச்சாரியில் உள்ள 2-வது மண்டல அலுவலகம், மாநராட்சி 3-வது மண்டல அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம், 4-வது மண்டல அலுவலகத்திலும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    இன்று முதல் மனுத்தாக்கல் 4-ந்தேதி வரை நடக்கிறது.

    இதனையொட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முதல் நாளான இன்று மதியம் வரை வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. 

    தேர்தலில் போட்டியிட ஆர்வம் உள்ள சுயேட்சை மற்றும் அரசியல் கட்சியினர் இன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் மனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.
    Next Story
    ×