என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொடைக்கானல் அருகே புதிய தார்சாலை பணிக்கு ஆங்கிலேய பெண்கள் எதிர்ப்பு
Byமாலை மலர்28 Jan 2022 9:19 AM GMT (Updated: 28 Jan 2022 9:19 AM GMT)
கொடைக்கானல் அருகே புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை ஆங்கிலேயே பெண்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பேத்துப்பாறை வயல் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து ஊராட்சி அதிகாரிகள் புதிய பணிக்கான பூமி பூஜையை நடத்தினர். இது குறித்து அறிந்ததும் அங்கு பல ஆண்டுகளாக வசித்து வரும் ஆங்கிலேயே பெண்கள் அப்பணியை தடுத்து நிறுத்துமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். புதிதாக சாலை அமைப்பதால் உங்களுக்கு சொந்தமான இடம் பாதிக்கப்படாது என்று உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீண்ட நேரமாக அவர்களிடம் சமாதானம் பேசி பூமி பூஜை பணியை நடத்தினர். இச்சம்பவத்தால் பேத்துப்பாறை வயல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X