search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

    பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
    புதுக்கோட்டை:

    உலக மகளிர்  தினமான மார்ச் 8 அன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்த தமிழ்நாட்டை  பிறப்பிடமாக கொண்ட தகுதியான நபருக்கு மாநில அரசின்  அவ்வையார் விருது ஆண்டு தோறும்  வழங்கப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத் தில் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற  துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றி வருகின்ற தனி நபரை அங்கீகரிக்கும் விதமாக மாநில அரசின் அவ்வையார் விருது வழங் கிட விண்ணப்பங்களை பிப்ரவரி 3&ந்தேதிக்குள் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவ லகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட் டுள்ளது. 

    தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை முதலமைச்சரால் உலக மகளிர் தின விழா அன்று  வழங்கப்படும். மேலும் கையேட்டில் இணைக்கப்பட வேண்டிய விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04322&222270 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×