என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மத பிரசாரத்தில் ஈடுபட்ட வாகனம் தடுத்து நிறுத்தம்
Byமாலை மலர்27 Jan 2022 10:20 AM GMT (Updated: 27 Jan 2022 10:20 AM GMT)
கொள்ளிடம் அருகே மத பிரசாரத்தில் ஈடுபட்ட வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 52). இவர் பூங்குடி கிராம மெயின் ரோட்டில் லாரியை பிரசார வாகனமாக மாற்றம் செய்து தாம் சார்ந்த மதத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
இதனை அறிந்த கொள்ளிடம் பா.ஜ.க ஒன்றிய தலைவர் நேதாஜி, மாவட்ட துணைத்தலைவர் சுஜாதா ஆகியோர் நேரில் சென்று மத பிரசாரம் செய்து கொண்டிருந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தை கொள்ளிடம் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.
பின்னர் அவர்களிடம் கொரோனா கட்டுப்பாடு இருந்து வருவதால் இதுபோன்ற பிரசாரத்தை தற்போது செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி மீண்டும் அவர்களிடம் வாகனத்தை திருப்பி வழங்கினர்.
போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X