என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்திஜி ரோடு நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    X
    காந்திஜி ரோடு நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    ஈரோடு: இன்று 2-வது வாரமாக 76 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-வது வாரமாக பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 13500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-வது வாரமாக பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 13500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
     
    முதல் கட்டமாக முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், 2 கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

    தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் என மொத்தம் 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 7,500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

    சிறப்பு முகாம்கள் நடத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 2-வது வாரமாக மாநிலம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 76 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. 

    இந்த சிறப்பு முகாமில் 13,500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சுகாதார பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×