search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

    பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:-

    இந்திய திருநாட்டின் 73 ஆவது குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    பின்னர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை புறக்கணிக்கும் வகையில் தமிழக அரசின் ஊர்தியை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்னர்.

    நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர் சங்க மாநிலசெயலாளர் பழனிச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகஸ்டின், கலையரசி மற்றும் நிர்வாகிகள் ரெங்கநாதன், கிருஷ்ணசாமி, கருணாநிதி, சிவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×