என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மகராஜகடை அருகே தந்தை கொலையில் மகன் கைது
Byமாலை மலர்27 Jan 2022 7:43 AM GMT (Updated: 27 Jan 2022 7:43 AM GMT)
கிருஷ்ணகிரி அடுத்த மகராஜகடை அருகே தந்தையை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அருகே உள்ள ஏக்கல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 68). விவசாயி. ஆடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு 4மகன்கள், 1மகள் உள்ளனர். தினமும் அவர் பலிகுமாரமத்துபாறை ஏறுமலை வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்காக கொண்டுசென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார். ஆனால் மாலை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் தேடி பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் முனியப்பன் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என மகராஜகடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், முனியப்பனை அவரது இரண்டாவது மகன் வெங்கடேசன் (எ) சின்னபையன் (37), தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனை போலீஸார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X