search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

    சட்டவிரோதமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியில் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை அமைத்து பல பகுதிகளில் சோதனை நடத்தி வந்தனர்.

     இந்நிலையில் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 36) என்பவர் வடகாடு ஏ. காலனியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்த 40 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 8300 பறிமுதல் செய்தனர். பிறகு அவரை வடகாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×